மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது

தாம்பரம், மார்ச் 6: பழைய பெருங்களத்தூரை சேர்ந்தவர் மதன் (50). இவருக்கு 45 வயதில் மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இவரது மனைவி வேலைக்கும், மூத்த மகள் பள்ளிக்கும் சென்றிருந்தனர். அப்போது 14 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். இந்நிலையில், போதையில் வீட்டிற்கு வந்த மதன், தனது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். புகாரின்பேரில்   போக்சோ சட்டத்தில் அவரை போலீசார் கைது செய்தனர் .

Related Stories: