சென்னை, மார்ச் 6: திருவிக நகர் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த முரளி என்பவரின் மகன், பள்ளிக்கு தாமதமாக வந்ததால் பள்ளி மைதானத்தை சுற்றி வாத்து நடை போடும்படி தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி வாத்து நடை போட்ட மாணவன் திடீரென மயங்கி விழுந்து இறந்தான். இதை தொடர்ந்து, மாணவனின் தந்தை முரளி அளித்த புகாரின் பேரில், திருவிக நகர் போலீசார், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெய் சிங், தலைமை ஆசிரியர் அருள், தாளாளர் ஜோசப் பெர்னாண்டஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.