×

லாரி கவிழ்ந்து விபத்து

பூந்தமல்லி, மார்ச் 6: சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து பழைய இரும்பு சேனல்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி செம்பரம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அதிக பாரம் ஏற்றி வந்ததால் ஏற்பட்ட அழுத்தம் தாங்க முடியாமல் எதிர்பாaராத விதமாக திடீரென டயர் வெடித்தது. இதனால் லாரி தலைகுப்புற கவிழ்ந்து இரும்பு தளவாடங்கள் சாலையில் உருண்டு விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுனர் சாந்தகுமார் எந்த ஒரு காயமின்றி உயிர் தப்பினார்.

எனினும் இந்த விபத்து காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேல் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் கிரேன் உதவியுடன் 2 மணி நேரம் போராடி லாரியையும் இரும்பு பொருட்களையும் அப்புறப்படுத்தினர்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்