×

அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

அரியலூர். ஜூன் 4: அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. அரியலூர் மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா சாஸ்திரி மற்றும் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் மக்களின் மனுக்களை பெற்று விசாரணை செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் 16 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

Tags : Ariyalur SP Office ,Ariyalur ,Superintendent ,Vishwesh Pa Shastri ,Ariyalur District ,Additional ,Muthamizhelvan ,Ariyalur District SP Office… ,
× RELATED தன்னார்வ குருதி கொடையாளருக்கு பாராட்டு