பிரதமர் பாலேந்திர ஷா பேச்சால் அமளி; நேபாள நாடாளுமன்றத்தின் மேலவையும் ஒத்திவைப்பு

காத்மாண்டு: இந்தியாவின் நிலப்பரப்பை நேபாளமும் ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் பாலேந்திர ஷா பேசியதை கண்டித்து, நேபாள நாடாளுமன்றத்தின் மேலவையிலும் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மேலவை நேற்று கூடியதும் கடும் அமளி தொடர்ந்தது.

பிரதமர் பாலேந்திர ஷா பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவரது பேச்சு நாடாளுமன்ற பதிவேடுகளில் இருந்து திரும்ப பெற்று நீக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியறுத்தின. இதைத் தொடர்ந்து, மேலவை தலைவர் நாராயண் பிரசாத் தஹால் அவையை வரும் 9ம் தேதி பிற்பகல் 1.15 மணி வரை ஒத்திவைத்தார்.

Related Stories: