ெமாபட்டில் இருந்து விழுந்த மூதாட்டி பரிதாப சாவு

ஆவடி, மார்ச் 5: ஆவடி, சி.டி.எச் சாலையில் பேத்தியுடன் மொபட்டில் சென்ற மூதாட்டி, ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கியபோது, தவறி விழுந்து இறந்தார். ஆவடி, கன்னிகாபுரம், நாகவல்லி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆண்டாள் (70). இவரது பேத்தி மதுமிதா. நேற்று மதியம் ஆண்டாள், பேத்தி மதுமிதாவுடன் பூ வாங்குவதற்காக ஆவடிக்கு மொபட்டில் புறப்பட்டார். சிடிஎச் சாலை, சிறப்பு காவல் படை 2ம் அணி அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் உள்ள ஸ்பீடு பிரேக்கரில் மொபட் ஏறி இறங்கியபோது, நிலைதடுமாறி ஆண்டாள் கீழே விழுந்து, படுகாயமடைந்தார். இதை பார்த்ததும், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஆண்டாள் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: