கொடியேற்றத்துடன் துவக்கம் நீடாமங்கலத்திலிருந்து 2,500 டன் அரிசி மூட்டைகள் வேலூருக்கு அனுப்பிவைப்பு

நீடாமங்கலம், மார்ச் 5: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், கூத்தாநல்லூர், மன்னார்குடி உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் தாளடி மற்றும் சம்பா சாகுபடி செய்த நெல்களை தனியார் முகவர்களிடமிருந்து அரசு பெற்று அரவை செய்த அரிசிகளை மத்திய சேமிப்பு கிடங்கு பாமணி மற்றும் வட்ட கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும். அப்படி சேமித்து வைத்த அரிசி மூட்டைகள் மற்றும் தாலுகா பகுதிகளில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்களில் சேமித்து வைத்துள்ள நெல்மூட்டைகள் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்கும், அரிசி மூட்டைகள் பொது விநியோக திட்டத்திற்கும் நீடாமங்கலத்திலிருந்து ரயில் பெட்டிகளில் அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் நேற்று மத்திய சேமிப்பு கிடங்கு பாமணி, திருத்துறைபூண்டி அருகே உள்ள கோவிலூர், நீடாமங்கலம் அருகேயுள்ள ஆதனூர் பகுதிகளிலிருந்து 2,500டன் சன்ன ரக அரிசி மூட்டைகளை நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு 200 லாரிகளில் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து, 58 ரயில் பெட்டி (வேகன்) களில் தொழிலாளர்கள் ஏற்றி வேலூர் காட்பாடிக்கு பொது விநியோக திட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: