கரூர், மார்ச் 5: கரூர் ராயனூர் இலங்கை தமிழர் முகாம் பின்புறம் சாக்கடை வடிகாலில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருவது குறித்து கண்காணித்து சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கரூர் ராயனூரில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் இங்கு வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில், வெங்கடேஷ்வரா நகர் பகுதியின் வழியாக செல்லும் சுற்றுச்சுவரோரம் உள்ள சாக்கடை வடிகாலில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் கலந்து வருகிறது.