செந்தூரான் கல்லூரி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

காரைக்குடி, மார்ச் 5:  காரைக்குடி அருகே லேணா விலக்கு செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் இலவச வேலைவாய்ப்பு முகாம் நாளை கல்லூரி வளாகத்தில் நடக்கவுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. டிப்ளமோ, பொறியியல், ஐ.டி.ஐ, சி.என்.சி ஆப்ரேட்டர் மற்றும் 8, 10, பிளஸ் 2 படித்தவர்கள், கலை அறிவியல் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். சிவகங்கை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பில் பங்குபெறுவர்கள் வசதிக்காக காரைக்குடி, திருப்பத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காலை 8 மணி முதல் இலவச பஸ் இயக்கப்பட உள்ளது.

Related Stories: