பரமக்குடி, மார்ச் 5: பரமக்குடி மேலசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பாலாஜி. இவரது மனைவி கண்மணியும் டாக்டராக உள்ளார். கண்மணி நேற்று காலை தனது வைரத்தோடை பர்ஸில் வைத்துவிட்டு வெளியில் சென்றவர். வீடு திரும்பியபோது, வைரத்தோடு காணவில்லை. பரமக்குடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.