வத்தல் வாங்க சென்றவரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

சாயல்குடி, மார்ச் 5:   முதுகுளத்தூர் பரமக்குடி சாலை வழித்தடத்தில் உள்ள சாம்பக்குளம் பஸ் நிறுத்தம் அருகே பறக்கும் படை அலுவலர் மரகதமேரி தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமத்திலிருந்து முத்துக்குமார் என்பவர் ஓட்டி வந்த லோடு வாகனத்தை சோதனை செய்ததில் ரூ.1 லட்சத்து 50ஆயிரம் இருந்துள்ளது. பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை செய்ததில் கோவில்பட்டிக்கு சென்று மிளகாய் வத்தல் வாங்கி வர சென்றது தெரியவந்தது.

Related Stories: