இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 இறுதிப் போட்டியில் தோல்வியைச் சந்தித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. மின் கசிவு காரணமாக வாகனம் முழுவதும் புகை சூழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அனைத்து வீரர்களும் ஊழியர்களும் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலிருந்து குஜராத் அணி தங்களது ஹோட்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, நேற்று இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அனைவரும் பாதுகாப்பாக இருந்தபோதிலும், இந்த இடையூறு காரணமாக வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் சாலையில் காத்திருந்தனர்.
முன்னதாக ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்றிருந்த அந்த அணிக்கு, இது மேலும் ஒரு மோசமான இரவாக அமைந்தது. மே 29 அன்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான தகுதிச்சுற்று 2 போட்டியில் விளையாடுவதற்காக, ஜிடி அணி மே 27 அன்று தர்மசாலாவிலிருந்து முல்லன்பூருக்குப் பயணிக்க வேண்டியிருந்ததால், இது அவர்களின் கடினமான பயணத் திட்டத்தின் தொடர்ச்சியாகவும் அமைந்தது.
