×

தேர்தல் பறக்கும்படை வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்த முடிவு தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல் தமிழகம் முழுவதும்

வேலூர், மார்ச் 5: சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும்படையினர் செல்லும் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. தேர்தல் நடத்தைகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் ஒரு பிடிஓ அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில் 2 போலீசார், ஒரு வீடியோ கிராபர் இடம் பெற்றுள்ளனர். மேலும் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். ஆனால் ஒரே இடத்தில் இருந்தபடி சோதனையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவர்களை கண்காணிக்கும் வகையில் அவர்களது வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கருவிகள் மூலம் அவர்கள் இருக்கும் இடம், நேரம் போன்றவை கண்காணிக்கப்படும். அதன்படி, தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரத்துக்கும் ேமற்பட்ட பறக்கும்படை, கண்காணிப்புக்குழு வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணிகள் முடிந்து ஓரிரு நாட்களில் தமிழகம் முழுவதும் பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி விரைவில் பொருத்தப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Election Division ,TN ,
× RELATED ராணுவ வீரர்களுக்கு தபால் ஓட்டிற்கு...