ஊட்டி, மார்ச் 4: ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நேற்று உலக வனவிலங்கு தினம் அனுசரிக்கப்பட்டது. விலங்கியல் துறை துணைப் பேராசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். விலங்கியல் துறை தலைவர் எபினேசர் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கலந்துகொண்டு வனவிலங்குகள் குறித்தும், அவைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். நீலகிரி வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் சரவணகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவிலேயே முதலாவதாக தோற்றுவிக்கப்பட்ட உயிர்ச் சூழல் மண்டலம் நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலம் ஆகும். அதேபோல் யுனஸ்கோ அந்தஸ்து பெற்றதும் நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலம் ஆகும்.