பந்தலூர், மார்ச் 4: பந்தலூர் அருகே பழைய நெல்லியாளம் பகுதியில் இருந்து நெல்லியாளம் டேன் டீ மற்றும் கொளப்பள்ளி பகுதிக்கு செல்லும் 1 கி.மீ. தூரமுள்ள தார்சாலை பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலையை பயன்படுத்த முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அவசர தேவைகளுக்காக ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.