கிணத்துக்கடவு, மார்ச் 4: கிணத்துக்கடவு அருகே மூளைக்காய்ச்சலுக்கு 10ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலியானார். கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ஊராட்சி மணிகண்டபுரத்தை சேர்ந்தவர் மாசாணம். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ரஞ்சித் (15). இவர், கிணத்துக்கடவு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. இதனால், கிணத்துக்கடவில் உள்ள தனியார் மருத்துவனையில் ரஞ்சித்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், காய்ச்சல் அதிகமானதால் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.