கோவை, மார்ச் 4: கோவை மலைவாழ் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பில் மலைவாழ் மாணவர்களின் கோரிக்கை மாநாடு ஆனைமலையில் நடந்தது. மாநாட்டில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் மலைவாழ் மாணவர்களின் கல்வி மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மலைவாழ் மாணவர்களின் உண்டு உறைவிடப்பள்ளியில் அனைத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளில் காலிப்பணியிடங்களில் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் பின்னடைவு பணியிடங்களை நிரப்ப வேண்டும்.