வந்தவாசி, மார்ச் 4: வந்தவாசியில் பறக்கும் படையினர் பெண்ணிடம் பறிமுதல் செய்த ₹61 ஆயிரத்தை உரிய ஆவணம் இல்லாத நிலையில் திரும்ப ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி- திண்டிவனம் நெடுஞ்சாலை எஸ்.காட்டேரி கிராமம் அருகே நேற்று, தாசில்தார் சுதாகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் உத்தமன் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக புதுவையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் பயணம் செய்த ெஜயந்தி என்பவரிடம் ₹61 ஆயிரம் ரொக்கம் இருந்தது. பறக்கும் படையினர் விசாரித்தபோது, ஜெயந்தி தனது உறவினருக்கு உடல் நிலை சரியில்லாமல் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ செலவிற்கான அந்த பணம் தேவைப்படுகிறது என கூறினார். ஆனால், பணத்திற்கான உரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து, வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருநாவுக்கரசிடம் ஒப்படைத்தனர். பின்னர், அங்கு வந்த ஜெயந்தி, தாசில்தார் திருநாவுக்கரசிடம் பணத்ைத திரும்ப தரும்படி மன்றாடி கேட்டார். அதற்கு தாசில்தார், ‘தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இது உங்களுக்கு தெரியாதா? பணம் பறிமுதல் செய்தது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டோம். நீங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சென்று கேளுங்கள்’ என தெரிவித்தார்.