கோவை, மார்ச் 4: கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள புகார் மனு: கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில், உதவி ஆணையாளராக பொறுப்பில் இருக்கும் ரவி, கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இப்பதவியில் பணியாற்றி வருகிறார். இவர், ஓய்வுபெற்ற பின்னரும், 3-வது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும், இவர் பணியில் ெதாடர்கிறார்.