அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ஈரோடு, மார்ச் 4: கொடுமுடி ரயில் நிலையத்தின் நடைமேடையில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவா் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: