ஈரோடு, மார்ச் 4: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் தற்காப்பிற்காக துப்பாக்கி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்து இருப்பவர்கள் உடனடியாக அவற்றை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் கதிரவன் தெரிவித்திருந்தார். இதன்பேரில், ஈரோடு மாவட்டத்தில் பிஸ்டல், ரைபிள், ஒற்றை மற்றும் இரட்டை குழல் என 1,447 துப்பாக்கிகள் உரிமம் பெற்று வைத்துள்ள உரிமையாளர்கள் துப்பாக்கிகளை போலீஸ் ஸ்டேஷன்களிலும், அதற்குரிய பாதுகாப்பு மையத்திலும் ஒப்படைத்தனர்.