திருச்சி, மார்ச் 4: திருச்சியில் தப்பியோடிய விசாரணை கைதியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கழிவறை செல்வதாக கூறி சென்ற திண்டுக்கல் விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வேல்வில்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா(எ)தாலிப்ராஜா(37). 2018ல் குற்ற வழக்கில் தொடர்புடைய இவரை திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இதில் தாலிப்ராஜாவிற்கு நீதிமன்ற காவல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக திண்டுக்கல் வடக்கு போலீஸ் சார்பில் போலீஸ்காரர் தேவராஜ் மற்றும் பெண் காவலர் கங்காதேவி ஆகியோர் நேற்று முன்தினம் மத்திய சிறைக்கு வந்தனர்.