அப்புறப்படுத்த பக்தர்கள் கோரிக்கை மாணவியை கடத்தி சென்ற கல்லூரி மாணவர் ேபாக்சோவில் கைது

திருச்சி, மார்ச் 4: திருச்சி கே.கே.நகர் ஜே.கே.நகர் ஜஸ்வர்யா தெரு பாரதிநகர் விஸ்தரிப்பை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் தர்ஷன்(20). இவர் கருமண்டபம் பகுதியில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வருகிறார். இவர் 17 வயதுடைய கல்லூரி முதலாமாண்டு படித்து வந்த மாணவியை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாணவியை கடத்தி சென்றுவிட்டதாக பெற்றோர் கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடத்தி சென்ற மாணவியை தர்ஷன் திருமணம் செய்துகொண்டதாக கூறி காவல் நிலையத்தில் இருவரும் சரணடைந்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு கன்டோன் ெமன்ட் மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மைனர் பெண்ணை கடத்தி சென்றதாக போக்சோ வழக்கில் தர்ஷனை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: