துறையூர், மார்ச் 4: துறையூர் காவல் நிலையத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருக்கு தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துறையூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விதுன்குமார், மளிகைக் கடை, நகைக்கடை, அச்சகம், கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருக்கு சில முக்கிய தேர்தல் கால ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார். சில கட்சியினர் பரிசுப் பொருட்களை வழங்குவதற்கு மளிகை கடைகளில் டோக்கன் மூலம் மளிகை பொருட்கள் விநியோகிக்க கூடாது.