மண்ணச்சநல்லூர், மார்ச் 4: மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் கொள்ளிட ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேர் சிக்கினர். மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேரடியாக புகார் சென்றது. இதன் பேரில் எஸ்பி., ராஜன் உத்தரவுப்படி எஸ்ஐ நாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று நொச்சியம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 8 மாட்டு வண்டிகளை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.