மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பயிற்சி முகாம்.

உடன்குடி, மார்ச் 4: மாற்றுத்திறன்  குழந்தைகளுக்கான பயிற்சி முகாம் உடன்குடியில் 2நாட்கள் நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கான  விழிப்புணர்வு சிறப்பு பயிற்சி முகாம் உடன்குடி வட்டார வள மைய அலுவலகத்தில்  நடந்தது.  பயிற்சியில் சிறப்பு கருத்தாளர் மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நாயகி கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாற்றத்திறனாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு ஆசிரியர்கள் ஜெயந்தி, எங்ஸ்டன். டேனியல், சுகுணா, செல்வபாய், இம்மானுவேல், மனாசே, செபஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

Related Stories: