தூத்துக்குடியில் 90 வேட்டிகள் பறிமுதல்

தூத்துக்குடி, மார்ச் 4: தூத்துக்குடியில் 90 வேட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று காலை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு வாகனத்தை வழிமறித்து சோதனை நடத்தினர். அந்த வாகனத்தில் 2 அட்டை பெட்டிகளில் சமக கட்சி கரையிட்ட 90 வேட்டிகள் இருந்தன. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் 90 வேட்டிகளையும் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: