×

அலங்காநல்லூரில் வெறிநாய் இன்று ஒரே நாளில் 15க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறியது

 

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் சுற்றித் திரிந்த வெறி நாய் இன்று ஒரே நாளில் 15க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறியது. அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிடி ஊசி மட்டும் போடப்பட்டு, அவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி செவிலியர்கள் கூறியுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேபிஸ் தடுப்பூசி இல்லை என செவிலியர்கள் கூறியதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Alanganallur ,Madurai ,Alanganallur Primary Health Centre ,Madurai Government Hospital ,
× RELATED பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்...