வாகன விபத்தில் தந்தை, மகன் பலி: தாய் படுகாயம்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த ஆட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (45). இவரது மனைவி சுமதி (35). இவர்களது மகன் பரத்குமார் (17). நேற்று மாலை சீனிவாசன், மனைவி மற்றும் மகனுடன் பைக்கில் செங்கல்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து, 3 பேரும் திருத்தணிக்கு புறப்பட்டனர். பூண்டி நோக்கி சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர் திசையில், வந்த லாரி, பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில், சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பரத்குமார், சுமதி படுகாயமடைந்தனர். தகவலறிந்து திருத்தணி போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்த தாய், மகனை சிகிச்சைக்காகவும் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், பரத்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். சுமதிக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: