மன்னார்குடி, மார்ச் 4: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடு களை கண்டித்து மன்னார்குடி நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன் பிஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து டிஎஸ்பி இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் பகவதி சரணம், டவுன் எஸ்ஐ முருகன் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மன்னார்குடி அலகு துணை மேலாளர் ஜேக்கப் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவை யான சாக்குகளை வழங்கி தேங்கி கிடக்கும் நெல்மணிகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படும், முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என துணைமேலாளர் ஜேக்கப் கொடுத்த உறுதியை ஏற்ற விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலை ந்து சென்றனர்.