கரூர், மார்ச். 4: கரூர் தாந்தோணிமலை அருகே அமராவதி ஆற்றில் மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்ற நிகழ்வு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் கருப்பம்பாளையம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றிச் செல்லப்படுவதாக தாந்தோணிமலை போலீசார்களுக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கால் யூனிட் மணலுடன் நின்று கொண்டிருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பியோடிய மாட்டு வண்டி உரிமையாளர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.