வேன் மோதி மாணவன் காயம்

சிவகாசி, மார்ச் 4: சிவகாசி அம்மன் கோவில்பட்டி சேர்ந்தவர் அமிர்தபிரகாஷ் மகன் அஜய்நரேந்திரன்(13). சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று சைக்கிளில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வேன் மோதி காயமடைந்தான். வேன் டிரைவர் சிமியோன் தேவ்பிரகாஷ் மீது சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: