பரமக்குடி, மார்ச் 4: பரமக்குடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுகாதார துறை மூலம் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல் கட்டமாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.