பேக்கரிக்குள் புகுந்த டிராக்டர்

தொண்டி, மார்ச் 4:  கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி பாவோடி மைதானம் பஸ் ஸ்டாப் அருகே பேக்கரி உள்ளே டிராக்டர் புகுந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி பாவோடி மைதானம் பஸ் ஸ்டாப் அருகில் பேக்கரி உள்ளது. நேற்று காலை பெருமானேந்தலை சேர்ந்த சதீஷ் குமார்(24) டிராக்டரை ஓட்டி வந்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் பேக்கரியின் உள்ளே புகுந்தது. கடையில் நின்று கொண்டிருந்த மச்சசாந்தி (32), சாந்தி(24) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவருக்கும் தொண்டி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மதுரைக்கு ஆனுப்பி வைக்கப்பட்டனர். டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: