காஸ் கசிந்து தீ விபத்து

தொண்டி, மார்ச் 4:  தொண்டி மகாசக்திபுரம் பகுதியில் நண்டு அவிக்கும் இடத்தில் காஸ் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது. தொண்டி கடற்கடரை பகுதியான மகாசக்திபுரத்தில் நண்டு அவிக்கும் சிறிய கம்பெனியை குமார் என்பவர் நடத்தி வருகிறார். நேற்று நண்டுகளை அவிக்க தீர்த்தாண்டதானத்தை சேர்ந்த விவேக்(24) காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது சிலிண்டரில் இருந்து காஸ் வெளியாகி கொண்டிருந்ததால் தீ பரவியது. இதில் விவேக் கையில் சிறு காயம் ஏற்பட்டது. திருவாடானையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்துள்ளனர். அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Stories: