கெங்கவல்லி, மார்ச் 4: கெங்கவல்லியில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளை மறைத்து கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்ட நிலையில், அதிகாரி எச்சரிக்கையால் மீண்டும் கட்டி மறைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், கெங்கவல்லி பேரூராட்சி பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சிலைகள், துணிகள் வைத்து மறைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, திடீரென ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் உருவச்சிலையை மறைத்து கட்டப்பட்டிருந்த துணிகளை அதிமுக நிர்வாகிகள் அகற்றினர்.