×

குடிநீர் கோரி மக்கள் மறியல் திண்டுக்கல் அருகே பரபரப்பு

திண்டுக்கல், மார்ச் 3: திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்டது பேகம்ஷாயிபா நகர். இங்கு 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து அப்பகுதியினர், பள்ளப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து நேற்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் குடிநீர், கழிவுநீர் வாய்க்கால், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் கோரி திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலை குட்டியபட்டி பிரிவில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பிறகே மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Dindigul ,
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...