×

முத்துப்பேட்டை பகுதியில் 2 பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி

 

முத்துப்பேட்டை, மே 23: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் வரும் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கிராமத்தில், குன்னலூர் கிராமத்தில் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இயந்திரம் மூலம் ராஜன் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல் முத்துப்பேட்டை மற்றும் ஜாம்புவனோடை கிராமத்தில் மொசவெளி வாய்க்கால் மொத்த நீளம் 3.500 கி.மீட்டர் ஆகும்.தற்பொழுது தூர்வார எடுத்துக்கொள்ளப்பட்ட நீளம் 3.500 கி.மீட்டர் ஆகும். இந்த பாசன வாய்க்காலின் மூலம் 600 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இந்த வாய்க்காலின் படுக்கை அகலம் 3.00 மீட்டர் ஆகும். தற்பொழுது இந்த வாய்க்காலிலும் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.

Tags : Muthupettai ,District Collector ,Mohanachandran ,Thiruvarur district ,Pandi village ,Muthupettai, ,Kunnalur village ,Water Resources Department… ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்