வாகன சோதனையில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

பரமக்குடி, மார்ச் 3:  பரமக்குடியில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஏப். 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்ல கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேந்தோணி என்ற இடத்தில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தங்கச்சிமடத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற மினி வேனை பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரபாகரன், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்து பரமக்குடி கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Related Stories: