×

ராஜபாளையம் அருகே கோயிலை உடைத்து நகை, பணம் ெகாள்ளை

ராஜபாளையம், மார்ச் 3:  ராஜபாளையம் அருகே கோயிலை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராஜபாளையம் அருகே அயன்கொல்லங்கொண்டானில் உள்ளது முத்து மாரியம்மன் கோயில். இங்கு நேற்று காலை வழக்கம்போல் பூஜை செய்ய பூசாரி மாரியப்பன் சென்றார். அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். சேத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் பீரோவில் இருந்த 9 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் மதிப்பு வெள்ளி பொருட்கள் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் ரூ.15 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. கைரேகை நிபுணர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!