×

மதுபானம் கடத்தல் தடுக்க பறக்கும் படை நியமனம்

விருதுநகர், மார்ச் 3: சட்டமன்ற தேர்தல் நடத்தை விதி நடைமுறையில் உள்ளதால் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க, கட்டுப்படுத்த மதுபான கடைகளில் தினசரி விற்பனையை கண்காணிக்க, மது தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் உதவி மேலாளர் சங்கரேஸ்வரி தலைமையில் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இந்த பறக்கும் படை கண்காணிப்பில் ஈடுபடும். சங்கரேஸ்வரி செல்எண்: 87607 97980, சஞ்சீவி செல்எண்: 97916 63777, பாண்டி செல்எண்: 98942 36988 ஆகியோரை தொடர்புகொண்டு பொதுமக்கள் மதுவிற்பனை, கடத்தல் பற்றிய புகார்களை அளிக்கலாம் என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு