×

ராஜபாளையத்தில் குப்பை தொட்டியான கழிவுநீர் ஓடை

ராஜபாளையம், மார்ச் 3:  ராஜபாளையம் நகரில் கழிவுநீர் ஓடையில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதாரக்கேடு அபாயம் நிலவுகிறது.
ராஜபாளையம் நகரில் குடியிருப்பு பகுதி வழியாக செல்லக்கூடிய கழிவுநீர் ஓடை சுகாதாரம் இல்லாமல் குப்பைகள் தேங்கி பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. இதனை உடனே சரிசெய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 இதுகுறித்து நகர்பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலேயே அதிக அளவு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு இறப்பு எண்ணிக்கை அதிக அளவு ராஜபாளையம் பகுதியில்  ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து பல ஆண்டுகளாக கழிவுநீர் செல்ல கூடிய ஓடைகள் அனைத்தும் பராமரிப்பற்ற சூழ்நிலையே நீடித்து வருகிறது. பெரும்பாலும் ஓடைகள் அனைத்தும்  குடியிருப்பு வழியாக  செல்வதால் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மீண்டும் டெங்கு போன்ற நோய்கள் அதிகமாக பரவும் அபாயம் இருந்து வருகிறது. எனவே உடனடியாக கழிவுநீர் ஓடைகளை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்