கடையநல்லூர், மார்ச் 3: கடையநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக விஜயகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.தென்காசி மாவட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 3ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். கடையநல்லூரில் இன்ஸ்பெக்டர் பணியாற்றிய மனோகரன் நெல்ைல மேலப்பாளையம் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அம்பையில் பணியாற்றிய விஜயகுமார் நேற்று கடையநல்லூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.