ஆரணி, மார்ச் 3: ஆரணி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். ஆரணி அடுத்த கல்லேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(29), பெயிண்டர். இவரது மனைவி பூர்ணிமா(23). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். சதீஷ் கடந்த சில மாதங்களாக மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதேபோல், கடந்த மாதம் 25ம் தேதியும் சதீஷ் மது போதையில் மனைவியை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பூர்ணிமா வீட்டில் யாரும் இல்லாதபோது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.