திருவண்ணாமலை, மார்ச் 3: திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில், போர்மன்ன லிங்கேஸ்வரர் கோயில் தேர் திருவிழா நேற்று நடந்தது. திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள போர்மன்ன லிங்கேஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. கோயில் கருவறையில் தேர் நிலையாக எப்போதும் இருப்பதும், போர்மன்ன லிங்கேஸ்வரர் தேரில் அமர்ந்து அருள்பாலிப்பதும் தனிச்சிறப்பாகும். ஆண்டுதோறும் மாசி மகம் முடிந்த மூன்றாம் நாளில், போர்மன்ன லிங்கேஸ்வரர் கோயில் தேர் திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி, இந்த விழா கடந்த 26ம் தேதி விநாயகர் ஊர்வலத்துடன் தொடங்கியது.