முதுகலை மாணவன் தற்கொலை: அரியலூரை சேர்ந்தவர்

வேலூர், மார்ச் 3: அரியலூரை சேர்ந்த முதுகலை மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம், கூவாகம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(21). இவர் வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் எம்சிஏ முதலாமாண்டு படித்து வந்தார். இதற்காக தன்னுடன் படிக்கும் 6 பேருடன் தொரப்பாடி பெரியார் நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருடன் தங்கியிருந்த மாணவன் பிரவீன்குமார் உணவு சாப்பிட வெளியே சென்றுவிட்டு திரும்பினார். அப்போது, சக்திவேல் வீட்டில் தூக்குப்போட்டு சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: