பிரபல ஓட்டல் அருகே திடீர் தீ

நாகர்கோவில், மார்ச் 3 : நாகர்கோவில் வடசேரி டிஸ்லரி ரோட்டில் உள்ள, பிரபல ஓட்டல் பின்புறம் உள்ள புதரில் நேற்று மதியம் தீ பிடித்தது. வெயில் கொளுத்தியதுடன், காற்றும் வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவி அந்த இடமே புகை மண்டலமாக மாறியது. இதனால் ஓட்டல் அறைகளில் தங்கி இருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஓட்டலில் ஏற்கனவே தீ தடுப்பு சாதனங்கள் மற்றும் தண்ணீர் வசதிகள் இருந்ததால்,  உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை.

இதையடுத்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்தனர். ஏற்கனவே அந்த பகுதி காடு போல் புதர் மண்டிய நிலையில் இருந்ததால், தீயின் வேகம் அதிகமாகவே இருந்தது. இதையடுத்து 2 தீயணைப்பு வண்டிகள் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அணைக்காமல் போடப்பட்ட சிகரெட் துண்டால் தீ பிடித்ததா? அல்லது மர்ம நபர்கள் தீ வைத்து இருப்பார்களா? என்பது தெரிய வில்லை. இது பற்றி வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: