கபிஸ்தலத்தில் வாகன சோதனையில் ரூ.1.18 லட்சம் பறிமுதல்

பாபநாசம், மார்ச் 3: நிலையான கண் காணிப்புகுழு வினர் ஹெலன் ஜாய்ஸ் தலைமையில் நேற்று இரவு பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் பெட்ரோல் பங்க் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுப் பட்டிருந்தனர். அப்போது அவ் வழியாக வந்த காரை மறித்து சோதனை மேற்கொண்டனர். இதில் பயணம் செய்த காரைக்கால் திருப்பட்டினத்தைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ 1.18 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் கைப்பற்றப் பட்ட பணத்தை பாபநாசம் தாசில்தார் முருகவேலிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: