வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

புதுக்கோட்டை, மார்ச் 3: புதுக்கோட்டை நகர பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறித்து தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் நகராட்சி ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன் அறிவுரையின்பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத் அலி தலைமையிலான அலுவலர்கள், கேஎல்ஏஎஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுதொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Stories: