அறந்தாங்கி, மார்ச் 3:அறந்தாங்கியில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த்மோகன் தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தமிழகம் முழுதும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அறந்தாங்கியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் அறந்தாங்கி சப் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அறந்தாங்கி சப் கலெக்டரும், அறந்தாங்கி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனந்த்மோகன் தலைமை வகித்தார். டி.எஸ்.பி ஜெயசீலன், கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.